மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விடுபட்ட மகளிர் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்த அவர் கூறியதாவது, மாமன்னன் இராஜராஜன் ஆட்சி செய்த இந்த மண்ணில் சுவாசிக்கும் போதே கம்பீரமாக உணர்கிறேன். விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன்.

அந்த வகையில் 82.75 லட்சம் குறுவை தொகுப்பு திட்டம் இந்த ஆண்டு அறிவிக்கிறேன். 56 ஆயிரம் விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்படுகிறது. 36 மாவட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். அதேபோன்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், காலை உணவு, விவசாயிகள் பயிர் காப்பீடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி புலம்பி கொண்டிருக்கிறார்.

எந்த தகவல் தெரியாமல் அரைவேக்காடு தனமாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார். இதையடுத்து ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் எனவும் அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடப்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.