
மாநகரப் பேருந்துகள் லக்கேஜ் விதிமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது டிராலி வகை சூட்கேசுகள், 65 சென்டிமீட்டர் அளவுள்ள சூட்கேசுகள் மற்றும் பைகளுக்கு கட்டணம் இல்லை என்று தெரிவித்துள்ளன. ஆனால் அதற்கு மேல் உள்ள சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோ அதிகம் உள்ள பைகளுக்கு ஒரு பயணிக்கான டிக்கெட் வசூலிக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதோடு தோள்களில் மாட்டிச் செல்லக்கூடிய பைகள், துணிப்பைகள், கேமரா போன்ற சாதனங்கள், லேப்டாப், சிறிய அளவிலான கையில் எடுத்துச் செல்லக்கூடிய மின் சாதனங்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்தியங்கள் என அனைத்திற்கும் இலவசம் என்று தெரிவித்துள்ளது.
20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லும் பைகளுக்கு பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்க வேண்டும். அதோடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீ பற்றி எரியக்கூடிய பொருள்களை அனுமதிக்க கூடாது. மேலும் பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மற்றும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எடுத்துச் செல்லப்படும் பெரிய அளவிலான பைகளை அனுமதிக்க கூடாது.