
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு என்று விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதைப்போன்று பெண் விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு இலவசம் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில் செல்போன் மூலம் விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு அரசு மானியம் தருவதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குரு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50% அல்லது ரூ.7000, மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40% அல்லது அதிகபட்சமாக ரூ.5000 வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்பு செட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.