
தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களிடையே கலைத்திறனை ஊக்குவிப்பதற்காக கலைத்திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவின் போது மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் முதலில் பள்ளி அளவில் மட்டுமே நடைபெறும் நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை பள்ளி கல்வித்துறை நீடித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி வரை மாணவ மாணவிகளின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலைத் திருவிழா போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் வாய்ப்பு கொடுத்தல் வேண்டும். அதோடு சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.