புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு விரைவில் தமிழகம் வரவுள்ளது.  அனைத்து பகுதிகளும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்ற.  தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்கிடம் மனுவாக அளித்துள்ளேன்

சென்னை நகரமும்,  மக்களும் இயல்பு நிலைக்கு வர தொடங்கியுள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு சேதம் பெருமளவில் குறைப்பு. தமிழகத்துக்கு 450 கோடியை முதற்கட்டமாக வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி என  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.