
சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அந்த கிராமத்தில் உள்ள ஒரு நபர் தனது இன்ஸ்டா ஐடி மூலம் தங்களது ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வீடியோக்கள் ஃட்ரெண்டான நிலையில் பலரும் கூமாபட்டி ஊருக்கு படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
@ உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து…
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க… pic.twitter.com/Kf5ZaX4yre
— Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) June 26, 2025
இந்நிலையில் கூமாபட்டி குறித்து விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது,