வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
47 வயது பெண்ணை திருமணம் செய்தும் அடங்காத 62 வயது முதியவர்”.. கள்ளக்காதலியுடன் உல்லாசம்… தூங்கும் போது தலையில் கடப்பாரையால் குத்தி கொடூரமாகக் கொன்ற மனைவி…!!!!!
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொளஞ்சியப்பன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி வீரலட்சுமி இறந்துவிட்டதால் இரண்டாவது ஆக பத்மாவதி (47) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் கொளஞ்சியப்பன் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த…
Read moreநீண்ட நேரம் ஆகியும் வெளியே வரல…! “போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்”… காரணம் என்ன…? தீவிர விசாரணை…!!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று காவல் நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சக போலீசார்…
Read more