
கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடிகை அருணா வசித்து வருகிறார்.
இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அருணாவின் கணவர் மோகன் குப்தா வீடு உள்கட்டமைப்பு அலங்கார பொருள்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் காலையில் 7:00 மணி முதல் அவரது வீட்டில் பரபரப்பாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.