
தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை…
- தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளில் 10,187 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டில் மீதமுள்ள 2,338 ஊராட்சிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
- தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு.
‘ - துவரம் பருப்பு சாகுபடி குறைந்து வரும் மாவட்டங்களில் 80 லட்சம் ஏக்கரில் துவரை பயிர்விக்க ஊக்குவிக்கப்படும்.
- நகர்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கப்படும்.