
மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த மாநாடு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தலைமையில் நடைபெறும் நிலையில் சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி சஷ்டி தோறும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி பாட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகைகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருக்கின்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
வரும் தேர்தலில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
பஹல்காம் தாகுதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்.
மேலும் இந்த ஆறு தீர்மானங்கள் தான் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.