
மதுரை தியாகராஜர் கல்லூரியில் கல்விக்கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, நான் சொல்கிறேன் நீங்களும். திரும்ப சொல்லுங்கள் என கூறி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டார்.
மேலும் மாணவர்களையும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போட வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.