
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் வைத்து மன்மோகன் செங்கற்கை இறுதி சடங்கு நடத்தப்படும். நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் சில நாட்கள் ஆகும் என மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.