சிவகாசி எடக்காபட்டி பட்டாசு சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள ரூ.9 லட்சத்தை 8 வாரத்தில் வழங்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்துக்கு உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். காளைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம் உள்ளிட்ட விதிகளை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி, வெடி பொருள் உள்ளிட்ட விதிகளையும் அரசு முறையாக பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்