பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் பெஞ்சல் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.