பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உச்சகட்ட மோதலானது நிறைவி வருகிறது. கடந்த ஆறு மாதமாக இந்த மோதல் போக்கானது நீடித்து வந்த நிலையில் இரு தலைவர்களுமே வந்து தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் என நடத்தி வருகிறார்கள்.

அதேபோல அன்புமணி ராமதாஸ் உடைய ஆதரவாளர்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றிலுமாக நீக்கிவிட்டு, கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களை நீக்கி புதிதாக நியமனம் செய்து வருகிறார்.

சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ (மேட்டூர் தொகுதி) சதாசிவம் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெட்டிக்காரனூர் ராஜேந்திரனை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.