
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவுபேசியதாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பாவு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு தெரிவித்தது.