
கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மண்டை ஓட்டினை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த ஆய்வகம் 3d முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது.
கொந்தகையில் கிடைத்த இரு மனித எலும்புக்கூடுகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 80 விழுக்காடு அறிவியல் மற்றும் 20 விழுக்காடு கலைப்பூர்வமாக இந்த முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் கண்டறிய திட்டமிட்டுள்ளனர். இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகள் 50 வயதுடைய மனிதர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடி உயரமும், பெண்கள் 5.2 அடி உயரமும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவில் முதல் முறையாக கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டை ஓடுகளை வைத்து முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் #கீழடி-யில் என பதிவிட்டுள்ளார்.
The way of life detailed in Sangam literature now stands scientifically validated through the findings at #Keeladi. Thanks to @timesofindia for this extensive coverage on #Keezhadi.
சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் #கீழடி-யில்!… https://t.co/gkOIyZnKpb
— M.K.Stalin (@mkstalin) June 29, 2025