உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் முகேஷ். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14வது சுற்றில் 58வது காய் நகர்தலில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப் போட்டி டிராவில் முடியும் என்று நினைக்கும் நிலையில் குகேஷ் 7.5 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார். தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு குகேஷ் பெருமை சேர்த்துள்ளார் என்று கூறிய நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்தியாவிற்கு மட்டும் இன்றி குகேஷ் வெற்றியால் தமிழ்நாட்டிற்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் குகேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குகேஷின் வெற்றி ஒரு வரலாறு மற்றும் முன்னுதாரணமானது. இவரின் வெற்றி அவரின் பெயரை வரலாற்றில் பொறித்தது மட்டுமின்றி, இளைஞர்களை கனவு காண தூண்டியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதே போன்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.