
பார்டர் கவாஸ்கர் டிராபி 5 போட்டிகள் கொண்டது. இந்த நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி 185 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து ஜடேஜா 26 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த பும்ரா 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணியில் போலந்து 4, ஸ்டார் 3, கம்மின்ஸ் இரண்டு, லைன் ஒன்று என விக்கெட்டுகளை வீழ்த்தினர்.