
குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் செல்போனை உருவாக்கவில்லை உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து தருகிறோம். உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது. எனவே இந்தியா உற்பத்தியில் முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உற்பத்தியை விடுத்து நுகர்வில் கவனம் செலுத்தினால் பற்றாக்குறை ஏற்படும் என கூறியுள்ளார்.
மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாக இருந்தாலும், பாஜக கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஒன்றிய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.