ஆ.இரா வெங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா வெங்கடாசலபதிக்கு 2021-ஆம் ஆண்டு இயல் விருது அறிவிக்கப்பட்டது. இவர் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பதிப்பு வரலாற்று ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் வரலாற்று பண்பாட்டு துறைக்கு முக்கியமான படைப்புகளை கொடுத்துள்ளார். இவர் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது ஆ.இரா வெங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.