
பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, என் அன்பு தமிழ்
சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள். ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.
அப்துல் கலாம் பிறந்த பூமி ராமேஸ்வரம். ஆன்மீகமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல் கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம் என கூறியுள்ளார்.