தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முழு உருவ சிலையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது மும்மொழி கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், மற்ற மொழிகளை கற்கும் போது தான் இந்த மாநிலத்திலிருந்து வெளியே செல்லும்போது வேலை வாய்ப்பு கிடைக்கும். பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும்.

எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை. தேமுதிக பொருத்தவரையில் தாய் மொழியை காத்து, அதேபோல அனைத்து மொழியையும் கற்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. கேப்டன் வழியில் தான் தேமுதிக. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கு ஏற்கனவே அழைப்பு வந்துவிட்டது. உறுதியாக அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.