அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதால் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.