இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் SS இன்நோவேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கிய SSI மந்த்ரா ரோபோடிக் அமைப்பின் மூலம் தொலைதூர அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் அமைப்பின் மூலம் குருகுராமிலிருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூருவில் உள்ள  ஒரு நோயாளிக்கு தொலைநிலை வழியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதாவது 35 வயதான நோயாளிக்கு இதய அறையில் இருக்கும் ஒரு சிறிய துளை இது பிறவி நிலையான நோயாகும். இதன் பெயர் ஏற்றியல் செப்டல் குறைபாடு (ADS) என கூறுவர். இந்த அறுவை சிகிச்சையை வழிநடத்திய டாக்டர் அருள் பெர்டாடோ கூறியதாவது, “ss மந்த்ரா ரோபோடிக் அமைப்பு மிகவும் பயனுள்ளதாகவும், துல்லியமாகவும் செயல்பட்டது. இதயம் போன்ற மிக முக்கியமான உறுப்புகளில் மிக நுணுக்கமாக ஆகச் சிறந்த நம்பிக்கையுடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது” என தெரிவித்தார்.

மேலும் இந்த அறுவை சிகிச்சை முறை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் தொலைதூர சிகிச்சை முறையை ஏற்படுத்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இதனைத் தொடர்ந்து SSI மந்த்ரா அமைப்புக்கு CDSCO அமைப்பின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் SSI  மந்த்ரா அறுவை சிகிச்சை ரோபோட்டிக் சிஸ்டம், டெலி சர்ஜரி மற்றும் டெலி ப்ரொடக்டர்ங்கிற்கான ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்ற உலகின் ஒரே ரோபோட்டிக் அமைப்பு என்ற பெயரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.