மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கட்றாபாளையம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உயிரிழந்த பெண்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு படுகாயம் அடைந்த 3 பெண்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா விடுதியின் உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத மற்றும் முறையான அனுமதியின்றி இயங்கும் தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கூறினார்.