கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!
Related Posts
“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…
Read more“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!
அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…
Read more