
சென்னை பெரியமேடு பகுதியில் கோமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முனீஷ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால் கோமதி தனியாக அவரை வளர்த்து வந்தார். இந்நிலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்த முனிஷ் அடிக்கடி கல்லூரிக்கு செல்வது போல நண்பர்களுடன் வெளியே சுற்றி வந்துள்ளார்.
அந்த சமயத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பல மணி நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். அவர்களுக்கிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதனால் மனவேதனை அடைந்த முனீஷ் கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் வீட்டிற்கு திரும்பிய தாய் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த தகவல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.