
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில், போலி திருமணங்கள் நடத்தி மணமகன்களிடம் கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலில் 3 பெண்களும் அடங்குவர்.
இந்த கும்பல் ஒரு பெண்ணைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து இரு ஆண்களுடன் திருமணம் செய்து வைத்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு, மணமகனிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மாயமாகிவிடுவர். மற்ற மூன்று பேர், அந்த பெண்ணின் உறவினர்கள் போல நடித்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இந்த கும்பலின் இந்த செயல், பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.