தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை போரூரில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கு மின்கம்பம் பட்டாசு போல வெடித்து சிதறி தீப்பிடித்து எரிகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.