கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஆசீர் நந்தா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு தேர்வில் இவர் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பள்ளியின் நிர்வாகம் சிறுமியை தனிமைப்படுத்தி வேறொரு அறையில் தனியாக வைத்துள்ளனர். இதனால் மன வேதனையில் இருந்து சிறுமி நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பிய நிலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.