மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நினைவரங்கத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். கூட்டணி பற்றி விரைவில் பேசி முடிவெடுப்போம். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லக்கூட தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனைத்து கட்சிகளுக்கும் சரிசமமாக இருக்க வேண்டும். ஒருதலை பட்சமாக நடக்கக்கூடாது. முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக கட்சி விளம்பரத்திற்காக நடத்தவில்லை.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும்தான் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. முதலமைச்சர் உட்பட அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் என்றால் எங்களை பார்க்க கூட அனுமதிக்க மாட்டார். இந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று ஒரு தலைப்பட்சமாக அறநிலத்துறை அமைச்சர் செயல்படுகிறார். நடிகர் விஜய் தனி கட்சி தொடங்கியுள்ளார்.

அவர் நல்ல நடிகர் மக்களோடு நல்ல உறவு வைத்துள்ளார். தமிழ்நாடு ஆன்மீக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது. தேர்தல் வருவதற்குள் திமுகவிலிருந்து நிறைய பேர் பாஜக கட்சிக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.