இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மாவின் கேப்டன்சி பாணியை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, விளையாட்டில் மிக அழுத்தமான சூழ்நிலைகளிலும் ரோஹித் அமைதியான நடத்தை மற்றும் தெளிவான தகவல் தொடர்பை கொடுப்பார்.

விளையாட்டின் போது ரோகித் எங்களை கோபமாக திட்டினாலும் அது எங்களைப் புண்படுத்தாது. அவர் எப்பொழுதுமே அணியின் நன்மைக்காகத்தான் சொல்வார். தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் நோக்கில் அவர் பேசவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

அதுதான் அவரது சிறப்பு தனித்தன்மை. அவரது எதிர்பார்ப்பை தொடரின் போதும், தொடருக்கு பின்னரும், தொடருக்கு முன்னரும் வீரர்களுக்கு துல்லியமாக புரியும் படி விளக்கும் திறன் கொண்டவர். பதட்டமான சூழ்நிலைகளிலும் கூட அமைதியை கடைப்பிடிப்பவர்.

அணியை எவ்வாறு நிதானமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். மேலும் ஒவ்வொரு விளையாட்டின்  போதும் வீரர்களுடனான தொடர்பில் மிகத் தெளிவாகவும், தனது எதிர்பார்ப்பையும், திட்டங்களையும் தெளிவாகவும் வீரர்களுக்கு குறிப்பிடும் ஒரு சிறப்பான கேப்டன் ஆவார் என கூறியிருந்தார்.