
கோவை விமானநிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தால் நிதியை பெற்றிருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார் என்று கூறினார். இந்நிலையில் டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது எனது டெல்லி பயணம் குறித்து ஏதோ அளந்து விட்டதை ரசித்தபடியே சென்றேன். பிரதமர் அனைத்து மாநில தலைவர்களையும் வரவேற்றிட முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினார். ஆதரவு, எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும் தன்னிலையில் உறுதியாகவும் இருக்கும் இயக்கம் திமுக தான் என்று இந்திரா காந்தி ஏற்கனவே சொல்லி உள்ளார்.
டெல்லி பயணம் குறித்து கற்பனை சிறகுகளை பறக்கவிட்டு அரசியல் எதிரிகள் அலாதி இன்பம் கண்டனர். யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்கு சென்றவர் ஈபிஎஸ். டெல்லியில் மீடியாக்கள் சூழ்ந்ததும் கட்சி அலுவலகம் வந்ததாக கூறினார். கட்சியை அடமானம் வைத்துவிட்டு கூட்டணி வைத்தவர் தான் அவர். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று தெரிவித்தார்.