டைரக்டர் வசந்தபாலன் படைப்பில் உருவாகிய அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிந்து. இவர் பல திரைப்படங்களிலும், சிறிய சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகை சிந்து தன்னை கருணை கொலை செய்யும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2020-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், வறுமை காரணமாக தனது சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருகிறார். இதனால் மிகப்பெரிய சித்திரவதை அனுபவித்து வருவதாக சிந்து கூறியுள்ளார். ஆகவே முடிந்தால் தமிழக அரசு எனக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்யும்படி கண்ணீர் மல்க நடிகை சிந்து தெரிவித்துள்ளார்.