
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கக்கோட்டு மூலை கரும்பிலாவிளை பகுதியில் அனந்த கிருஷ்ணன்(62) என்பவர் வசித்து உள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆனதால் ஜெகதீஸ்வரி தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் அனந்த கிருஷ்ணன் தனது மகன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவது வழக்கம்.
கடந்த 19-ஆம் தேதி மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அனந்த கிருஷ்ணன் தனது வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு நேற்று மாலை அனந்த கிருஷ்ணன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அனந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.