டெல்லி தலைநகரில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோன்று இந்த ஆண்டும் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பாக அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இணையதள பதிவில் கூறியதாவது,”டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அதிமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும்.

ஆனால் திமுக அரசின் தொடர் அலட்சியத்தால் இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை. தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அணிவகுப்பில் அலங்கார உறுதி இடம்பெற வேண்டும். இதனை அனுமதிக்காத மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சியின் சார்பாக கடுமையான கண்டனங்கள்” என தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதில் கூறியதாவது, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்புவதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச அணிவகுப்பில் இடம்பெறும். இதனால் சுழற்சி முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெற்றது. இனிமேல் 2026 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும். இவ்வாறு தமிழக அரசு சரி தகவல் சரிபார்ப்பு அமைப்பகம் விளக்கம் அளித்துள்ளது.