
உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியா நகரில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு கவிதா மற்றும் குஞ்சா 2 இரண்டு பெண்கள் வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 22ம் தேதி ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை பார்த்த கோவிலில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் குஞ்சா மணமகன் போல கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்து, இருவரும் மாலை போட்டு சடங்குகளை செய்து திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து குஞ்சா கூறியதாவது, நாங்கள் இருவரும் முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் சந்தித்தோம். எங்களுடைய கணவர்கள் மதுபானத்திற்கு அடிமையாகி தினமும் போதையில் வந்து எங்களை துன்புறுத்துகின்றனர்.
இந்த தகவலை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அதன் பின் ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். கணவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளான நாங்கள், அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையை வாழ முடிவு செய்தோம். ஒரு தம்பதியாக நாங்கள் கோரக்பூரில் வசிக்க போகிறோம். நாங்கள் இருவரும் குடும்பம் நடத்துவதற்காக வேலைக்கு செல்ல இருக்கிறோம் என்று கூறினார். இது குறித்து கோயில் பூசாரி கூறியதாவது, அந்த பெண்கள் 2 பேரும் திருமணம் மாலைகள் மற்றும் குங்குமம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வந்து, சடங்குகளை செய்தனர். அதன் பின் அமைதியாக திரும்ப சென்று விட்டனர் என்று கூறினார்.