உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்தில் அந்த மனைவி தற்கொலை செய்து இறந்து போனார். அவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதால் தான் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் கடந்த வருடம் புகார் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாமனார் மாமியார் கணவரின் 2 சகோதரிகள் துன்புறுத்தியதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் 4 பேருக்கும் அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அந்த 2 பெண்களுக்கும் ஜாமின் வழங்கியது செல்லுபடி ஆகும் என்று நீதிமன்றம் கூறிய நிலையில் மாமனார், மாமியாருக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்தது. அதன் பின் வரதட்சணை மரணங்கள் குறித்து நீதிபதி கூறுகையில் இதுபோன்ற மரணங்கள் சமூக பிரச்சனையாக இருப்பது துரதிஷ்டவசமானது என்றும், இது மாதிரியான வழக்குகளில் ஜாமீன் வழங்க ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

அதோடு இத்தகைய கொடூரமான செயல்களை செய்வதாக கூறப்படும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க அனுமதிப்பது விசாரணையின் நியாயத்தை மட்டுமல்ல, குற்றவியல் நீதி அமைப்பின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைப்பதற்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார்.