டொனால்ட் டிரம்ப கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். மேலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வடகொரியா அதிபர் கிம் புத்திசாலி என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் வடகொரியா அதிபர் கிம் ஒரு மதவெறியர் அல்ல என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். அதோடு விரைவில் அவரை தொடர்பு கொண்டு பேச உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.