
இந்தியாவில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். சிறு தொழில் நிறுவனம் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து உயர் பதவிகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய வேளாண் துறையிலும் அதிக அளவிலான பெண் பணியாளர்களின் பங்களிப்பு இருப்பதாக 2021-22 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேளாண் துறை சார்ந்த பணிகளில் 62.9% பெண்கள் பணியாற்றுகிறார்கள். இதேபோன்று உற்பத்தி துறையில் 11.2% பெண்கள் பணியாற்றுகிறார்கள். அதன் பிறகு வணிகம் மற்றும் விடுதிகளில் 5.9 சதவீத பெண்கள் பணியாற்றுகிறார்கள். மேலும் மற்ற சேவை சார்ந்த துறைகளில் 13.6 சதவீதம் பெண்கள் பணியாற்றுவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.