உலகம் முழுவதும் கனவு 2020ம் ஆண்டு கொரோனா என்ற நோய் தொற்று கண்டறியப்பட்டது. இது முதல் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின் அனைத்து மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மழை காலம், வெயில் காலம் என்று எந்த காலமானாலும் ஏதாவது ஒரு நோய் தொற்று பரவ தான் செய்கிறது. இந்த நோய் தொற்றின் பரவலை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் அந்த நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தொற்றுகள் பரவுவதற்கு முக்கிய காரணம்  மனிதர்களுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பது தான். அதேநேரத்தில் நோயாளிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு நேரடியாக தொடர்பு என்பதை தவிர்க்க முடியாது. இந்நிலையில் கேரளா கோழிக்கோடு பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் ஆதிதேவ் என்ற மாணவர் ஒருவர் நர்சிங் ரோபோ ஒன்றை தயாரித்துள்ளார். அவர் நோய் தொற்றின் பாதிப்பின் போது சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இது  நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளுக்கு, டாக்டர் மற்றும் நர்சுகள் நேரடியாக மருந்துவர்கள் வழங்குவது தவிர்க்கப்படுகிறது. இதில் வீடியோ அழைப்பு வசதியும் இருக்கிறது. இதனை ரிமோட் மூலமாகவும் இயக்க முடியும். இந்த ரோபோ பல்வேறு பரப்புகளில் நகர்ந்து செல்லவும் முடியும். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மற்றும் நர்சுகள் 100 மீட்டர் தொலைவில் இருந்து ரோபோவை இயக்கி நோயாளிகளை கண்காணித்து மருந்து வழங்க முடிகிறது. இந்த ரோபோ இரவிலும் செயல்படும் வகையில் எல்இடி விளக்குகள் இருக்கின்றது.