
அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவரது பெயர் ரமேஷ் விஸ்வகுமார் (40). விமானம் விபத்து ஆன பிறகு விமானத்திலிருந்து தனி ஒருவராக அவர் மட்டும் தனியாக காயங்களுடன் தள்ளாடியபடி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது விமானத்தின் எமர்ஜென்சி எக்ஸிட் வழிக்கு அருகே உள்ள இருக்கையில் அவர் அமர்ந்திருந்ததால் விமானம் விபத்துக்குள்ளாகும்போது அதன் வழியே வெளியே குதித்து தப்பியுள்ளார். இதேபோன்று இதற்கு முன் நடைபெற்ற விமான விபத்துகளில் தனி நபராக உயிர் பிழைத்த அதிசயங்கள் நடந்துள்ளன.
அதாவது கடந்த 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜூலியான் கோப்கே என்ற 17 வயதான இளைஞர் LANSA விமான விபத்தில் 10000 அடி உயரத்தில் இருந்து அமேசான் காட்டில் விழுந்தும் 11 நாட்கள் கழித்து மீட்கப்பட்டார்.
அதேபோன்று 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெஸ்னா வுலோவிக் சென்ற விமான பணிப்பெண் JAT யுகோஸ்லாப் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் பாராசூட் இல்லாமல் 10,160 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
மேலும் ஜார்ஜ் லாம்சன் ஜூனியர்(17) என்பவர் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரெனோவில் galaxy airlines flight to 203 விமான விபத்தில் ஜார்ஜ் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
அதேபோன்று 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 வயதான செசிலியா சிச்சான் என்ற சிறுமி Northwest airlines flight 255 விமான விபத்தில் இடிபாடுகளில் இருந்து உயிரோடு மீட்கப்பட்டார்.
இதனை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம் போலிங்கே என்பவர் comair flight 5191 என்ற விமானம் விபத்துக்குள்ளான போது உயிர் பிழைத்த துணை விமானி ஆவார்.
இதேபோன்று பாஹியா பஹோரி என்ற 12 வயது சிறுமி கடந்த ஜூன் 2009 ஆம் ஆண்டு yemenia flight 626 என்ற விமான விபத்தின் போது தனியாக 9 மணி நேரம் கடலில் தத்தளித்து பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
இதனைப் போன்று டிகிரிபோலியில் நடந்த விமான விபத்தில் கடந்த மே மாதம் 2010 ஆம் ஆண்டு ரூபன் வான் அசோ என்ற 9 வயது சிறுவன் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.