அண்மையில் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக கல்வியாளர்கள் அணி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுகவில் புதிதாக கல்வியாளர்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைவராக செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமன நியமிக்கப்பட்டுள்ளார்.