
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விளானூரில் மிசா ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக தலைமை கழக தீர்மானக் குழு உறுப்பினர் ஆவார். இவர் கடந்த ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணா விருதினை பெற்றார்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று அவர் உயிரிழந்தார். இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.