
சீனாவில் ஹு என்ற பெண் வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பின் கணவனின் குடும்பத்திற்காக வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது குழந்தை உட்பட வீட்டில் உள்ள அனைவரையும் நன்றாக பராமரித்துள்ளார். இந்நிலையில் ஹூ விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹூ தான் செய்த வீட்டு வேலைக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அந்த பணத்தை 5 மடங்கு அதிகமாக கொடுக்குமாறு உத்தரவிட்டது. மேலும் வீட்டு வேலை என்பது கணவன் மனைவியாகிய இருவருக்கும் பொதுவானது தான். ஆனால் மதிப்பெற்றது அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது.