
பிரபல இந்திய ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ். ராஜசேகர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் குழந்தை இல்லாத அவரது மனைவி தாரா ராஜசேகரின் மறைவிற்குப் பிறகு ஹவுசிங் லோன் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இருப்பினும் ஆங்காங்கே இருந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயற்சி செய்தபோது உதவுவதாக கூறி சிலரால் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், இந்நிலையில் கோர்ட் தனது கணவருடன் வாழ்ந்த வீட்டை ஜப்தி செய்ய ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி நேற்று காலை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ராஜசேகர் மனைவி தாராவை வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டை ஜப்தி செய்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த தாரா கூறியதாவது, “தமிழ் திரையுலகில் மதிக்கக்கூடிய இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த என் கணவருக்காக கூட யாரும் எனக்கு உதவி செய்யவில்லை தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.