இந்திய ஜிம்னாஸ்டிக்ஸின் முதுகெலும்பாக இருந்த தீபா கர்மாகர் திடீரென தனது விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை நெருங்கி வந்து, வெறும் 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அதை தவறவிட்டார். இது இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. தீபா கர்மாகரின் இந்த ஓய்வு, இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.