திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ரூபாய் 300 டோக்கன் பெற்றவர்கள் 5 மணி நேரமும், சர்வ தரிசனம் டோக்கன் பெற்றவர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள். 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி 3 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் இருக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதி அடைகின்றனர்.