
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 259 பகுதிகளில் போர்க்கால ஒத்திகைகள் நடைபெறுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
அந்தப் போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் எந்தவித பயமோ, பதற்றமோ அடைய வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போர்க்கால ஒத்திகையை ஒட்டி இன்போசிஸ் உள்ளிட்ட பிரபல ஐடி நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்போசிஸ் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.